search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேற்கு வங்க மாநிலம்"

    மேற்கு வங்க மாநிலத்தில் ரெயில் நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.3 கோடி மதிப்பிலான அந்த தங்க கட்டிகளை பறிமுதல் செய்த போலீசார் ராஜூ ஆதாஷை கைது செய்தனர். #GoldSmuggled #Myanmar #3Crore
    சிலிகுரி:

    மேற்கு வங்க மாநிலம் அவுராவில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகார் நோக்கி சென்ற காம்ருப் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மர்மநபர் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மேற்கு வங்க மாநிலம் புது ஜல்பய்குரி ரெயில் நிலையத்திற்கு அந்த ரெயில் வந்தபோது மாறுவேடத்தில் இருந்த அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது மேற்கு வங்க மாநிலம் கூக்ளியை சேர்ந்த ராஜூ ஆதாஷ் என்பவர் இடுப்பில் சுற்றி இருந்த பெல்ட் மற்றும் ஷூவில் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 9 கிலோ எடையுள்ள, ரூ.3 கோடி மதிப்பிலான அந்த தங்க கட்டிகளை பறிமுதல் செய்த போலீசார் ராஜூ ஆதாஷை கைது செய்தனர்.

    அந்த தங்க கட்டிகள் மியான்மரில் இருந்து மணிப்பூர் வழியாக கடத்திவரப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. 
    மேற்கு வங்க மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியவர்கள் பயணம் செய்த கார் குளத்தில் விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். #BengalCarAccident
    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலம் கூச் பெகர் மாவட்டத்தில் நேற்று இரவு திருமண நிகழ்ச்சி முடிந்து உறவினர்கள் ஒரு காரில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். துபாமாரி காவல் சரகத்திற்கு உட்பட்ட ஜிரன்பூரில் சென்றபோது, கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரத்தில்  உள்ள குளத்தில் விழுந்து மூழ்கியது.

    இதில் காருக்குள் இருந்த 5 வயது குழந்தை உள்பட 7 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இதில் 3 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தண்ணீரின் அடிப்பகுதிக்கு கார் சென்றுவிட்டதாலும், இருட்டு நேரம் என்பதாலும் உடனடியாக அவர்களை மீட்க முடியவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

    இதேபோல் வடக்கு தினஜ்பூன் காலாகாச் பகுதியில் போலீஸ் வேனும் லாரியும் இன்று நேருக்கு நேர் மோதியதில் 31 பேர் காயமடைந்தனர். #BengalCarAccident
    ×